ஓடைக்கு வெளியே
இத்தனை நாட்களாக என் கருத்துக்களை வெளியிட ஓடை வலைப்பதிவை மட்டுமே பயன்படுத்தி வந்தேன். ஓடை மின்னிதழுக்குத் தொடர்பில்லாத பொதுவான கருத்துக்கள் / எதிர்வினைகள் போன்றவற்றையும் ஓடை வலைப்பதிவில் எழுதி வந்ததால் ஓடை மின்னிதழ் தனக்குரிய தனித்தன்மையில் குறைவதாய் எனக்கொரு உறுத்தல் இருந்து வந்தது. இதனைக் களைந்து, எனக்கான தனி ஒரு களமாக இந்த புதிய வலைப்பதிவைத் துவங்கியுள்ளேன். இதன் மூலம் ஓடை பலருடைய (நான் உள்பட) கருத்துக்களைத் தாங்கி வரும் ஒரு தனி மின்னிதழாகத் தொடர்ந்து விளங்கும்.ஓடை வலைப்பதிவில் இருந்து சில கருத்துக்களை வெளியே எடுத்து இங்கே இட்டுள்ளேன். என்னுடைய கருத்துக்கள் தொடர்ந்து இங்கும், ஓடையிலும் வெளியாகும்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home