Monday, April 26, 2004

மரபிலக்கியம்

மரபிலக்கியம் என்ற மடற்குழு ஒன்றை நண்பர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள். நானும் சேர்ந்திருக்கிறேன். ஆயினும் மடற்குழுவின் சில குறைபாடுகளை உணர்ந்து வலைப்பதிவுக்கு வந்த என்னால், வலைப்பதிவில் நிறைய நாள் உண்டு, உறங்கி வாழ்ந்த பின்னால் திரும்ப மடற்குழுவைப் பயன்படுத்தும்போது அதன் குறைகள் மிகப் பெரியதாகத் தெரிகிறது. அவை:
1. அனைத்து மடல்களும் Plain Text வடிவத்தில் வருகின்றன. மைக்ரோசாப்ட் அவுட்லுக் பயன்படுத்தும் நான் ஒவ்வொரு மடலையும் draft வடிவத்துக்கு மாற்றி , பின் அதனை rich text வடிவத்துக்கு மாற்றி, பின் சரியான font -ஐத் துழாவி பின் படிக்க வேண்டியிருக்கிறது. அதிலும் சிலர் என்ன font பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்து கொள்ள இயலவில்லை
2. படிக்கும்போது ஒரு தொடர்ச்சி கிடைப்பதில்லை. மற்றொருவர் முன்பொருநாள் எழுதியதைச் சுட்டும்போது அதனைத் தேடிப் படிப்பது மிகவும் கடினமே (அந்தக் கருத்துக்களை முழுமையாக தனது மடலிலும் இணைக்க வேண்டியிருக்கிறது)
இன்னும் பல நீங்கள் அறிந்தவையே.

இருப்பினும் முழு நேர இணையத்தொடர்பு இல்லாதவர்களுக்கு, மடற்குழுதான் வழி.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home